Monday, 20th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

பூனைக்கு சீமந்தம் - வைரல் வீடியோ 

டிசம்பர் 30, 2020 12:11

திருவள்ளூர் : திருவேற்காட்டில் செல்லமாக வளர்த்த பூனைக்கு சீர் வரிசைகளுடன் சீமந்தம் நடத்திய சம்பவம்  சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
திருவேற்காட்டை சேர்ந்தவர் ஜோதி குமார். இவர் தனது  வீட்டில் செல்லப்பிராணிகளான  நாய் மற்றும் பூனைகளை வளர்த்து வருகிறார். இந்தநிலையில் இவர் வளர்க்கும் பூனை ஒன்று குட்டி போடும் நிலையில் இருப்பதை உணர்ந்த அவர் அதற்கு சீமந்தம் நடத்த வேண்டுமென முடிவு செய்தார்.

 இதையடுத்து கருவுற்றிருக்கும் பெண்களுக்கு செய்வது போன்று பூனைக்கு சீமந்தம் செய்ய குடும்பத்தினர் முடிவு செய்தனர்.  அதன்படி செல்லமாக பூனைக்கு அலங்காரம் செய்து வரிசை தட்டுகள் வைத்தும் ஏழு விதமான உணவுகள் மற்றும் பூனைக்கு பிரியமான நண்டு, மீன், இறால் உள்ளிட்ட அசைவ உணவுகள் வைத்து நாற்காலியில்  அமரவைத்து பிரத்தியேகமாக அமைக்கப்பட்ட வளையல்களை பூனையின்  கால்களில் அணிந்து உறவினர்களை அழைத்து சீமந்தம் நடத்தினார்கள். 

தனது பிள்ளைகள் போல பாவித்து வளர்க்கும் செல்லப்பிராணிகளுக்கு சீமந்தம் நடத்தி வைத்தது மகிழ்ச்சி அளிப்பதாக ஜோதி குமார் தெரிவித்தார். மேலும் இந்த காட்சிகள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

தலைப்புச்செய்திகள்